ஊரடங்குச்சட்ட உத்தரவை மீறிய 29,694 பேர் கைது..!

நாடாளாவிய ரீதியாக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மீறி பயணித்த 29 ஆயிரத்து 694 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காவற்துறை ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் 7 ஆயிரத்து 646 வாகனங்கள் காவற்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரங்கு சட்டத்தை மீறிய 331 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த காலப்பகுதியில் 72 வாகனங்களை காவற்துறையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.