Tamil News
Home செய்திகள் உலக தமிழர் பேரவையை நிராகரித்த கஜேந்திரகுமார்

உலக தமிழர் பேரவையை நிராகரித்த கஜேந்திரகுமார்

இலங்கைக்கு பயணம் செய்துள்ள உலக தமிழர் பேரவையை சந்திக்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மறுத்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இலங்கையை வந்தடைந்த பேரவையின் உறுப்பினர்கள், சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பௌத்த பீடங்களின் முக்கிய தேரர்களை சந்தித்து பேச்சுக்களை முன்னெடுத்திருந்தனர்.

பேரவையினரின் குறித்த நடவடிக்கை, இலங்கையிலுள்ள தமிழ் அரசியல்வாதிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், உலக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை சந்திக்க வேண்டுமென பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் கோரியுள்ளார்.

இதனை நிராகரித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேரவையின் உறுப்பினர்களுடன் தமக்கு பேச எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version