உறவுகளை நினைவுகூரும் விவகாரம்- எஸ்.சிறிதரன் ஜனாதிபதிக்கு கடிதம்

உறவுகளை நினைவுகூரும் உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் கடிதம்  ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், “கடந்த ஆண்டும்  வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்களது உறவுகளை நினைவுக்கூர முடிந்தது. அந்தநிலைமை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

மீண்டும் யுத்தம் ஒன்றையோ பயங்கரவாத செயற்பாடுகளையோ விரும்பாத மக்கள், போர்காலத்தில் உயிர்நீத்த தங்களது உறவினர்களை நினைவுகூரும் உரிமையை கொண்டிருக்கின்றனர்.

அந்த உரிமையை உறுதி செய்வதன் மூலும் சிறந்த தலைவர் என்ற மதிப்பை ஜனாதிபதியால் தமிழ் மக்கள் மத்தியில் பெற முடியும்” என்று எஸ்.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.