Tamil News
Home செய்திகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார்? ஹக்கீம் தெரிவித்த புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி யார்? ஹக்கீம் தெரிவித்த புதிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் உண்மையான சூத்திரதாரி வேறு ஒருவர் என தெரிவித்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் ஜஹ்ரான் ஹாசிமுக்கும் ஐஎஸ் அமைப்பிற்கும் இடையில் நேரடி தொடர்புகள் எதுவுமில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் சாட்சியமளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்த வேறு ஒரு அமைப்பே உயிர்த்தஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டது என அவர் தெரிவித்துள்ளார்.

எந்த அமைப்பு இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தாலும் நாட்டை பலவீனப்படுத்தும் அவர்களின் நோக்கம் நிறைவேறியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட குழு ஜஹ்ரானையும் அவரது உறுப்பினர்களையும் இந்த தாக்குதலுக்காக பயன்படுத்தியது என தெரிவித்துள்ள அவர் தங்களை மறைத்துக்கொள்வதற்காக ஐஎஸ் அமைப்பின் பெயரை அந்த அமைப்பு பயன்படுத்தியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஊடகங்கள் இல்லாத நிலையில் குறிப்பிட்ட அமைப்பு எதுவென்பதை வெளிப்படுத்தமாட்டேன் என ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

Exit mobile version