உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்- அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும்

1673515128331 உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம்- அடிப்படை உரிமைகளை மீறுவதற்கான வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும்இலங்கை அரசாங்கத்தின் உத்தேச  பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடிப்படை உரிமைகளை திட்டமிட்ட முறையில் மீறுவதற்கான  வலுவை அதிகாரிகளிற்கு வழங்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் சட்டமூலத்தை விலக்கிக்கொள்ளவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ள  சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் எந்த பயங்கரவாத எதிர்ப்பு சட்டமும் சர்வதேச தராதரங்களை பேணுவதை கலந்தாய்வு மூலம் இலங்கை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தற்போதைய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கண்டனங்;கள் எழுந்ததை தொடந்து அரசாங்கம் முன்னேற்றகரமான சட்டத்தை கொண்டுவருவதாக உறுதியளித்தது,ஆனால் இந்த பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கு பதில் உத்தேச பயங்கரவாத தடைச்சட்டமூலம்  பயங்கரவாதம் குறித்த வரைவிலக்கணத்தை  அதிகரித்துள்ளது ஒன்றுகூடல் கருத்துசுதந்திரம் ஆகியவற்றிற்கான உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது எனவும் சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அமைதியான விதத்தில் தன்னை விமர்சிப்பவர்களையும் சிறுபான்மை சமூகத்தவர்களையும் இலக்குவைப்பதற்கான கடுமையான சட்டங்களை பயன்படுத்துவதற்கு அனுமதிக்கும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி தெரிவித்துள்ளார்.

உடன்படமறுப்பவர்கள் மீதான அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்துவைப்பதற்கு இலங்கை அரசாங்கம் தற்போதைய பயங்கரவாத தடை சட்டத்தை தவறாக பயன்படுத்துவதும் உத்தேச சட்டம் மூலம் உள்ள ஆபத்தை வெளிச்சம் போட்டு காட்டுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.