உச்சம் தொடும் கொரோனா மரணங்கள் – நேற்று மட்டும் 54 மரணங்கள் பதிவு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் 54 பேர் சாவடைந்துள்ளனர் என்று அரச தகவல் திணைக்களம் நேற்றிரவு அறிவித்துள்ளது. இதுவே ஒரே நாளில் வெளியிடப்பட்ட அதிக கொரோனா மரங்களின் எண்ணிக்கையாகும்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 22 பெண்களும், 32 ஆண்களும் உள்ளடங்குகின்றனர். இதற்கமைய இலங்கையில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,844 ஆக அதிகரித்துள்ளது.