Tamil News
Home செய்திகள் ஈஸ்டா் தாக்குதல் குறித்து இதுவரை வெளிவராத 8 விடங்கள்

ஈஸ்டா் தாக்குதல் குறித்து இதுவரை வெளிவராத 8 விடங்கள்

ஏப்ரல் 21 தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் வெளிவராத 8 விடயங்கள் தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு நேற்று தகவல் வழங்கியதாக கொழும்பு ஆயர் இல்லத்தின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக அருட்தந்தை சிறில் காமினி நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இந்த நிலையில், கொழும்பு பேராயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தமக்கு சிறந்த முறையில் வரவவேற்றபளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் செயற்படும் பொறுப்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இல்லை என குறிப்பிடவில்லை.

மாறாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரை உரிய முறையில் சேவையாற்றுவதற்கு இடமளிக்கவில்லை என தோன்றுகிறது. அதேநேரம், சவால்மிக்க கேள்விகள் எவையும் நேற்று எழுக்கப்படவில்லை. தற்போது வெளியாகாத பல தகவல்கள் நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டன.

அதேநேரம் முன்னதாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் பிரதி ஒன்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்படுமாயின் ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னணியில் உள்ள சகல தரப்பினர் தொடர்பான தகவல்களும் வெளியாகும் என கொழும்பு ஆயர் இல்லத்தின் பேச்சாளர் அருட் தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version