Tamil News
Home செய்திகள் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மகாநாயக்கர்கள், பேராயரிடம் கையளிப்பு

ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை மகாநாயக்கர்கள், பேராயரிடம் கையளிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு அறிக்கை மல்வத்தை, அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களிடமும் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடம் நேற்று கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மல்வத்தை பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய திப்படுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரிடம் நேற்று காலை கையளிக்கப்பட்டது.

ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீரவினால் முற்பகல் மல்வத்தை மகா விஹாரை மற்றும் அஸ்கிரிய மகா விஹாரையில் வைத்து தேரர்களிடம் அறிக்கை கையளிக்கப்பட்டது.

அதேவேளை. இந்த அறிக்கையின் மற்றொரு பிரதி பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கப்பட்டது. நேற்று பிற்பகல் கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் வைத்து ஜனாதிபதியின் சட்ட பணிப்பாளர் நாயகம் ஹரிகுப்த ரோஹனதீர பேராயர் அவர்களிடம் அறிக்கையை கையளித்தார்.

Exit mobile version