Tamil News
Home செய்திகள் ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் உண்மைத் தன்மை வெளிப்படுத்தப்பட வேண்டும் – ஞானசாரர்

 

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தின் உண்மை தன்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்று கருதியே மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையை ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தவேண்டும் என பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார்.

பொதுபல சேனா அமைப்பின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டுகருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையை ஜனாதிபதியிடம் மாத்திரம் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை பிரதமருக்கும், பாராளுமன்றத்துக்கும் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை. ஆனால் அறிக்கை குறித்து சமூகத்தின் மத்தியில் மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான அறிக்கையை அறிந்துகொள்ளநாட்டு மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளார்கள். அறிக்கையின் உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்தும் பொறுப்பு அரச தலைவருக்கு உண்டு. பாதுகாக்கப்படவேண்டிய இரகசிய தகவல்களை தவிர்த்து ஏனையவற்றை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யப்பட வேண்டும் என்றும் எமக்கு எதிராக விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள தாகஒரு ஊடகம் மாத்திரம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்விடயம் குறித்து ஜனாதிபதி செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளோம்.

பௌத்த உரிமையையும்,நாட்டின் இறையாண்மையையும் பாதுகாக்க பொதுபல சேனா அமைப்பு தொடர்ந்து குரல் கொடுத்துள்ளது. 2010 தொடக்கம் 2019 ஆண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இடம் பெறும் வரை இஸ்லாமியஅடிப்படைவாதம் குறித்து கருத்துரைத்தோம். நாம் குறிப்பிட்ட கருத்தை சிங்கள அரச தலைவர்களும், முஸ்லிம் தலைவர்களும் கருத்திற் கொள்ளவில்லை.

மாறாக குறுகிய அரசியல் நோக்கிற்காக எம்மை இனவாதியாக விமர்சித்ததார்கள். இறுதியில் ஏப்ரல் 21 தாக்கத்துடன் அனைத்தும் உண்மை என வெளியானது. பொதுபல சேனா அமைப்பை தடைசெய்யும் முயற்சியை முறியடிக்கும் அணுகுமுறையை நன்கு அறிவோம். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் இஸ்லாமிய அடிப்படைவாதம் அழிக்கப்படவில்லை” என்றார்.

Exit mobile version