Tamil News
Home உலகச் செய்திகள் ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்

ஈரான் மீது நடவடிக்கை இல்லை – ஐரோப்பிய ஒன்றியம்

அணுப் பொருட்கள் சேமிப்பு அளவு உடன்படிக்கையை ஈரான் மீறி இருந்தாலும் அதன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரேப்பிய ஒன்றியம் நேற்று (03) தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

2015 ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அணுஆயுதப் பொருட்களின் சேமிப்பு அளவு தொடர்பான உடன்பாட்டை ஈரான் மீறியுள்ளதாக அணுவாயுத கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருந்தது.

அதனைத் தொடர்ந்து அமெரிக்கா ஒருதலைப்ட்சமாக உடன்பாட்டில் இருந்து வெளியேறியதுடன், இரு நாடுகளுக்குமிடையில் போர்ப் பதற்றமும் ஏற்பட்டிருந்ததுடன், ஈரான் அமெரிக்காவின் உளவு விமானத்தையும் சுட்டு வீழ்த்தியிருந்தது.

அதனைத் தொடர்ந்து ஈரானின் தலைவர் மற்றும் படை அதிகாரிகள் மீது அமெரிக்கா தடைகளை மேற்கொண்டிருந்தது. எனினும் தாம் ஈரான் மீது தடை எதனையும் மேற்கொள்ளப்போவதில்லை என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

Exit mobile version