Tamil News
Home உலகச் செய்திகள் ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா

ஈரான் மீதான தடை அமெரிக்காவின் மோசமான செயல்: ரஸ்யா

ஈரான் தலைவர் அயோதொல்ல அலி மற்றும் படை அதிகாரிகள் மீதான அமெரிக்காவின் தடை மிகவும் மோசமான செயல் ஆனால் நாம் ஈரானுக்கு உதவியாக நிற்போம் என ரஸ்யா நேற்று (25) தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் அதி நவீன உளவு விமானத்தை கடந்த வாரம் ஈரான் சுட்டு வீழ்த்தியதைத் தொடர்ந்து ஈரானின் அதிபர் மற்றும் படை அதிகாரிகள் மீது அமெரிக்கா புதிய தடைகளை விதித்துள்ளது.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கை மத்தியகிழக்கு நாடுகளின் உறுதித்தன்மைக்கு ஆபத்தானது மட்டுமல்ல உலகின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலானது. ஆனால் நாம் ஈரான் மக்களுக்கும் அதன் அரசுக்கும் உறுதுணையாக நிற்போம் என ரஸ்யா தெரிவித்துள்ளது.

இதனிடையே, ஈரானினால் சுடப்பட்ட அமெரிக்க விமானமானது ஈரானின் வான்பரப்பிலேயே பறந்ததாக ரஸ்யாவின் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்த தகவலை ரஸ்யா ஐ.நா பாதுகாப்புச் சபையில் தெரிவித்துள்ளது.

Exit mobile version