ஈரான் அணு ஒப்பந்தம்: செறிவூட்டப்பட்ட யுரேனியம் குறித்து அதிபர் ரூஹானி

அணு மின் உற்பத்தி செய்த பிறகு மீதி இருக்கின்ற செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளில் விற்றுவிடுவதற்கு பதிலாக  நாட்டிலேயே சேமித்து வைக்கப்போவதாக ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

2015ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் ஏனைய தரப்புகள், தங்களின் கடமைகளை நிறைவேற்ற வேண்டுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கெய் லாவ்ரோஃப் கூறியுள்ளார்.

அறுபது நாட்களில் உயரிய நிலையிலான யுரேனிய செறிவூட்டலை மீண்டும் உருவாக்கப்போவதாக அவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தை பாதுகாப்பதற்கு அதில் கையெழுத்திட்டுள்ள ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈரானும், ரஷ்யாவும் வலியுறுத்திய சற்று நேரத்திற்கு பின்னர் இந்த கூற்று வந்துள்ளது.

ஈரான் எடுத்துள்ள முடிவை அணுசக்தி ஒப்பந்தத்தின் பிற உறுப்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா, பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் புதன்கிழமை காலை தெரிவித்துள்ளது.

அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது முதல் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் சர்ச்சை தோன்றியது.

ஈரானின் அணுசக்தி அபிலாஷைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு, அதன் மீதான பொருளாதாரத் தடைகளை அகற்றி கொள்வதாக கூறி ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது.

அணுசக்தி உடன்படிக்கையின் கீழ் கூட்டு விரிவான திட்டம் (JCPOA) என்று அழைக்கப்படும் ஈரான் பொருளாதாரத் தடைகள் நிவாரணத்திற்கு பதிலாக தனது அணுசக்தி நடவடிக்கைகளை குறைக்க ஒப்புக்கொண்டது.

அமெரிக்கா மீண்டும் பொருளாதார தடைகளை விதித்ததால், ஈரானின் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

பட உதவி: பி.பி.சி.