இஸ்ரேல் – பாலத்தீனம்: காசா மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்

பாலத்தீனத்தின் காஸா பகுதியில் ஹமாஸ் போராளிகளின் இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் ஆரம்பித்துள்ளது.

இன்று அதிகாலை முதல்  இந்த தாக்குதல் தொடங்கியிருப்பதாக கூறப்படுகின்றது.

செவ்வாய்க்கிழமையன்று காசா பகுதியில் இருந்து வெடிபொருள்களைக் கொண்ட பலூன்கள் இஸ்ரேலை நோக்கி பறக்கவிடப்பட்டதில் பல இடங்களில் தீப்பற்றியதாக இஸ்ரேலிய தீயணைப்புத் துறை கூறுகிறது.

கடந்த மே 21-ம் திகதிக்குப் பின்  இந்தப் பிராந்தியத்தில் நடக்கும் பெரிய மோதலாக இது கருதப்படுகின்றது.

காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் காசா இயக்கத்தின் எச்சரிக்கையை மீறி கிழக்கு ஜெருசலேம் பகுதியில் யூத தேசியவாதிகள் பேரணி நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் உருவாகியிருக்கிறது.