Home உலகச் செய்திகள் இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் – துருக்கி

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் – துருக்கி

இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் என துருக்கி அறிவித்துள்ளது. சனிக்கிழமை பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இடம்பெற்ற மிகப்பெரும் பேரணியில் கலந்துகொண்டு பேசும்போதே துருக்கி அதிபர் றிசெப் ரையீப் ஏர்டோகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாம் ஏற்கனவே பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். இஸ்ரன்புல்லில் இடம்பெற்ற பேரணியை உலங்குவானூர்தியில் சென்று பார்வையிட்ட அவர் பின்னர் கூட்டத்தில் பேசியிருந்தார். பாலஸ்தீன கொடியை தனது தலையில் அணிந்திருந்தார்.

turky2 இஸ்ரேலை போர்க் குற்றவாளியாக அறிவிக்க தயார் - துருக்கிஇஸ்ரேல் எப்படி இங்கு வந்தது என எங்களுக்கு தெரியும், நீங்கள் ஆக்கிரமிப்பாளர்கள், நீங்கள் ஒரு குழுவே தவிர நாடு அல்ல. மேற்குலகம் உங்களை ஆழ்கின்றது. எங்களுக்கு நீங்கள் தேவையில்லை. ஹமாஸ் விடுதலைப்போராட்ட அமைப்பு என்று நான் கூறியது இஸ்ரேலுக்கு பிடிக்கவில்லை என எனக்கு தெரியும்.

எனவே தான் நான் கூறினேன். எதற்கு நீங்கள் காத்திருக்கிறீங்கள்? உக்ரைன் – ரஸ்யா போரில் பொதுமக்கள் கொல்ப்பட்டபோது முதலைக்கண்ணீர் வடித்தவர்கள் இன்று காசாவில் பல ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்படும் போது அமைதியாக இருக்கின்றனர். எமது மக்கள் உயிருடன் இருப்பார்கள், உறுதியான எழுந்து நிற்பார்கள். காசாவில் இடம்பெறுவது இஸ்ரேலின் தற்பாதுகாப்பு அல்ல, திட்டமிட்ட இரத்தக்களரி

இதனிடையே, ஏர்டோகனின் இந்த பேச்சை தொடர்ந்து இஸ்ரேலில் உள்ள துருக்கியின் இராஜதந்திரிகள் அனைவரையும், நாட்டைவிட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.

பிரித்தானியாவில் 100 ஆயிரம் மக்களுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஊர்வலம் ஒன்று சனிக்கிழமை இடம்பெற்றிருந்தது.

Exit mobile version