Tamil News
Home செய்திகள் இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் – அன்ரோனியோ குற்றூஸ்

இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் – அன்ரோனியோ குற்றூஸ்

மனித உரிமையை வாழ்வுக்குக் கொண்டு வரும் இளையோர்களின் பங்களிப்பை இவ்வாண்டு மனித உரிமைகள் தினத்தில் கொண்டாட விரும்புகின்றோம் என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அனைத்துலக மனித உரிமைகள் தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உடல்நலம் தரக்கூடிய சுற்றுச் சூழலைப் பேணுவதற்கான உரிமைக்காகவும், இளம்பெண்களதும் பெண்களதும் சமத்துவ உரிமைக்காகவும், தீர்மானங்களை எடுப்பதில் தங்களுக்கான பங்களிப்புக்களுக்காகவும், தங்களின் கருத்துக்களைச் சுதந்திரமான வெளியிடும் உரிமைக்காகவும் உலகெங்கும் இளையோர்கள் பேரணிகள் நடத்தியும்இ அமைப்புக்களை உருவாக்கியும் இவை குறித்துப் பேசியும் வருகின்றனர்.

இவர்கள் தங்களுடைய எதிர்கால அமைதிக்காகவும், நீதிக்காகவும், சமமான வாய்ப்புகளுக்காகவும் அணிதிரண்டெழுகின்றனர். எங்கே வாழ்கிறார்கள், எந்த இனத்தை, சாதியை, மதத்தை, சமுகத்தன்மையை, பால் தன்மையை, பாலியல்அமைப்பினை, அரசியல் அல்லது கருத்துக்களை உடையவர் என்ற நிலைகளை, வலுவின்மை வருமானமின்மை என்பற்றைக் கொண்டடிருப்பவராயினும் அல்லது வேறு எந்த நிலைகளில் இருந்தாலும், ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும் எல்லா உரிமைகளுக்கும் தகுதியுள்ளவனாகவே உள்ளான்.

இந்த அனைத்துலக மனித உரிமைகள் தினத்தில் நான் ஒவ்வொருவரையும் இளையோர்கள் மனித உரிமைக்காக எழுந்து நிற்பதற்கு ஆதரவு அளியுங்கள் என வேண்டுகோள் விடுக்க விரும்புகின்றேன்” என ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம், அன்ரோனியோ குற்றூஸ் (Antonio Guterres) தனது அனைத்துலக மனித உரிமைகள் தினத்துக்கான 2019ம் ஆண்டுச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Exit mobile version