Tamil News
Home செய்திகள் இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்குள் 2,500 ற்கும் அதிகமான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரி.வி.சானக்க தெரிவித்துள்ளார்.
இவர்கள் முழுமையான சுகாதார வழிகாட்டலுக்கு அமைய செயற்படுவது உறுதிப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரம் இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 69 ஆயிரத்து 348 ஆக அதிகரித்துள்ள அதே நேரம் இதுவரை 356 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Exit mobile version