Tamil News
Home செய்திகள் இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டன – பெருமளவு பணியாளர்களுக்கு கொரோனா

இலங்கை வங்கியின் 23 கிளைகள் மூடப்பட்டன – பெருமளவு பணியாளர்களுக்கு கொரோனா

நாடு முழுவதும் உள்ள இலங்கை வங்கியின் 23 கிளைகள் இன்று அதிரடியாக மூடப்பட்டுள்ளன.

வங்கியின் ஊழியர்கள் பலருக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புத்தாண்டு விடுமுறையைத் தொடர்ந்து இலங்கை வங்கியின் தலைமையகத்தில் 50 பேருட்பட 70 க்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதனையடுத்தே 23 கிளைகளை உடனடியாக மூடிவிடுவதற்கு இலங்கை வங்கியின் தலைமையகம் முடிவெடுத்தது.

குறிப்பிட்ட 23 கிளைகளும் ஏழு மாகாணங்களில் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version