Tamil News
Home செய்திகள் இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவும் -சீனா

இலங்கை நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதி உதவும் -சீனா

சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி  இலங்கை நெருக்கடிகளில்இருந்து மீள்வதற்கும் தீர்வை காண்பதற்கும் உதவும் என சீனா கருத்து வெளியிட்டுள்ளது.

நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன்மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்குமாறு வர்த்தக மற்றும் பல்தரப்பு கடன்வழங்குநர்களிற்கு அழைப்பு விடுப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் இதனை தெரிவித்துள்ளார்.

இது ஒரு சிறந்த செய்தி இலங்கை நெருக்கடிகளிற்கு தீர்வை காண்பதற்கும் அதிலிருந்து மீள்வதற்கும் உதவி புரியும் என நாங்கள்  கருதுகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைஅரசாங்கம் கடன்பிரச்சினைகளிற்கு விரைவாகவும் சிறந்த விதத்திலும்தீர்வை காண்பதற்கு உதவும் விதத்தில் சீனாவின் எக்சிம் வங்கி நிதி ஆவணங்களை வழங்கியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது இலங்கை தனது கடன்பேண்தகு தன்மையை அடைவதற்கு உதவுவதில் சீனா எவ்வளவு தூரம் நேர்மையான விதத்தில் செயற்பட்டது முயன்றது என்பதை வெளிப்படுத்துகின்றது எனவும் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளார் தெரிவித்துள்ளார்.

சீனா உரிய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடன்இணைந்து செயற்படுவதற்கும் இலங்கை தனது நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கும் உதவுவதற்கும் தயாராகவுள்ளது.

இலங்கையின் கடன்சுமையை குறைப்பதற்கும் அது பேண்தகு அபிவிருத்தியை அடைவதற்கும் உதவ தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version