இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளிற்கு அமெரிக்கா மருத்துவ உதவி

இலங்கை உட்பட தென்னாசிய நாடுகளிற்கான அவசர மருந்து பொருட்களுடன் அமெரிக்க விமானமொன்று புறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை மாலைதீவு பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளின் மக்களின் உயிர்களை காப்பாற்றுவதற்காகவும் கொரோனா வைரசினை தடுப்பதற்காகவும்   அமெரிக்கா இந்த மருந்துபொருட்களை அனுப்பி வைப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதில் இலங்கைக்கு 880,000 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களையும் 1200 ஓக்சிமீற்றர்களையும் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னிலை பணியாளர்களுக்கும் அமெரிக்கா அனுப்பிவைக்கின்றது என  தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி – தினக்குரல்