இலங்கையை அச்சுறுத்தும் கொரோனா- பெருந்தொற்றால் ஒரே நாளில் 71 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றுமுன்தினம் மாத்திரம் 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

38 பெண்களும், 33 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்று சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தியுள்ளார்.

இதையடுத்து நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 704 ஆக அதிகரித்துள்ளது என அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.