Tamil News
Home செய்திகள் இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 797 ;நேற்று பாதிக்கப்பட்டோரில் 25 பேர் கடற்படையினர்

இலங்கையில் கொரோனா தொற்று எண்ணிக்கை 797 ;நேற்று பாதிக்கப்பட்டோரில் 25 பேர் கடற்படையினர்

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 797ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 29 பேர் நேற்று புதன்கிழமை காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுள்ளவர்கள் என நேற்று அடையாளம் காணப்பட்ட 29 பேரில் 24 பேர் கடற்படையினர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய ஐந்து பேரும் கடற்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 797ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று முன் தினம் அடையாளம் காணப்பட்ட மூவருக்கு நேற்று கோரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகி நிலையில் அவர்கள் மூவரும் இந்தப் பட்டியலில் நீக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை 215 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர். 573 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Exit mobile version