இலங்கையில் 97 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு

உலகில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இலங்கையில் நேற்று 11பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 97ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவால் நேற்று இரவு 10.30 வரை எடுக்கப்பட்ட கணிப்பீட்டின்படி, வெளியிடப்பட்ட அறிக்கையில் இத்தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மேலும் ஏற்படாதவாறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது குறிப்பிடத்தக்கது.