Tamil News
Home செய்திகள் இலங்கையில் 30 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

இலங்கையில் 30 ஆயிரத்தைக் கடந்த கொரோனா தொற்று, பலி எண்ணிக்கையும் அதிகரிப்பு

இலங்கையில், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 30 ஆயிரத்து 613ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றினால் இதுவரை 144 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சர்ச்சைக்குரிய கேகாலை வைத்தியர் தம்மிக பண்டார தான் தயாரித்துள்ள கொரோனா வைரஸ் மருந்தினை நாடாளுமன்றத்தில் இன்று ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளார்.

ஆயுர்வேமருந்தினை சபாநாயகர் உட்பட பல ஆளும்கட்சி உறுப்பினர்கள் பருகிப்பார்த்துள்ளனர். சுகாதார அமைச்சர் உட்பட பல அமைச்சர்களும் அதனை பயன்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட மருந்தினை கொள்வனவு செய்வதற்காக பெருமளவான மக்கள் வைத்தியரின் கேகாலை வீட்டிற்கு படையெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version