இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனாவுக்குப் பலி – நேற்று 568 பேருக்கு தொற்று

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். 6 ஆண்களும், 2 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் சிறைக் கைதியாவார் எனவும் அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனாத் தாக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 227 பேர் கொரோனாவின் மூன்றாவது அலையில் மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதேவேளையில், இலங்கையில் நேற்றும் 568 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்படி நாட்டில் மொத்தத் தொற்றாளர்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவின் மூன்றாவது அலை மூலம் 45 ஆயிரத்து 186 பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது. மொத்தத் தொற்றாளர்களில் 42 ஆயிரத்து 91 பேர் குணமடைந்துள்ளனர். 6 ஆயிரத்து 625 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.