இலங்கையில் மேலும் 8 பேர் மரணம் – தொற்றாளர் எண்ணிக்கையும் 749 ஆல் உயர்வு

இலங்கைக்குள் மேலும் 08 பேர் கொரோனாத் தொற்றால் மரணமாகினர். இதனையடுத்து நாட்டின் கொரோனா மரண எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேள நேற்று மாத்திரம் இலங்கைக்குள் கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 749 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் மொத்த கொரோனாத் தொற்றாளிகளின் எண்ணிக்கை 53ஆயிரத்து 62ஆக உயர்ந்துள்ளது.

7627 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.