Tamil News
Home செய்திகள் இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும்- ஐ.நாவில் கனடா வலியுறுத்தல்

இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய வேண்டும்- ஐ.நாவில் கனடா வலியுறுத்தல்

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கனடா ஆழ்ந்த கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியபோதே  கனடா தனது கரிசனையை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ ஆற்றிய உரையில்,

மனித உரிமை பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரும் உரிமையை மறுத்தல் மற்றும் சிறுபான்மையினரின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறு இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிசெய்ய மனித உரிமைகள் பேரவையின் அவசியத்தை, மனித உரிமைகள் ஆணையாளர் அண்மையில் வெளியிட்ட அறிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றும் குறிப்பிட்டார்.

அத்தோடு பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை நிலைநாட்டும் நடவடிக்கைக்குக் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என கனேடிய வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version