Tamil News
Home செய்திகள் இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்வு

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 39,045 ஆக உயர்வு

இலங்கையில் மேலும் 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களில் 388 பேர் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 18 பேரும் சிறைச்சாலைக் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 39,045 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மையங்களில் 8 ஆயிரத்து 293பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சைப்பெற்று வருபவர்களில் மேலும் 686 பேர் இன்று(வியாழக்கிழமை) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 568 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 184 ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version