இலங்கையில் கடந்த 17 நாளில் 37,000 பேர் கொரோனாவால் பாதிப்பு

இலங்கையில் மே மாதத்தில் நேற்று(17) வரை 37,056 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொவிட் -19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 1 ஆம் திகதி முதல் இன்று(18) காலை 6 மணி வரை கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 7,819 பேர் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் கம்பஹா மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 6,230 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.