இலங்கையில் இருந்து சட்ட விரோதமாக தமிழகம் சென்றவர்கள் கைது

யாழ்பாணத்தில் இருந்து சட்டவிரோதமான முறையில் ஒரு பைப்பர் படகில் தமிழகம் சென்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திரிகோணமலை பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி வயது 45 அவரது மனைவி சல்மா வேகம் வயசு 35 இவர்களது மகன் அன்சார் வயசு 10 ஆகிய மூன்று பேரும் கோடியக்கரை சவுக்கு காட்டில் வந்து இறக்கியதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மூன்று பேரையும் வேதாரண்யம் கடலோர காவல் படையினர் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு அகதியாக வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.