Tamil News
Home செய்திகள் இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் இறப்புக்கள்!

இலங்கையில் அதிகரிக்கும் யானைகளின் இறப்புக்கள்!

உலகில் அதிக எண்ணிக்கையிலான யானையின் இறப்புக்கள் இலங்கையில் பதிவாகியுள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது.

அதேநேரம் மனித-யானை மோதலால் அதிக எண்ணிக்கையிலான மனித இறப்புகள் பதிவாகும் நாடுகளின் பட்டியில் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கை உள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மனித-யானை மோதலை சுற்றியுள்ள பிரச்சினைகள் குறித்து நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தகவல்கள் குறித்து அரசாங்கக் கணக்குக் பற்றி அறியும் கோபா  குழுவுக்கு அறிவிக்கப்பட்டது.

மனித – யானை மோதலால் இலங்கையில் ஒரு வருடத்திற்கு சராசரியாக 272 யானைகள் உயிரிழப்பதாக கூறப்பட்டது. எனினும் கடந்த ஆண்டு மாத்திரம் அந்த எண்ணிக்கை 407 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன் இப் பிரச்சினை காரணமாக ஆண்டுதோறும் சரசாரியாக 85 நபர்கள் உயிரிழப்பதாகவும் கடந்த ஆண்டு 122 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  கூறப்பட்டுள்ளது.

Exit mobile version