Tamil News
Home செய்திகள் இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்; இந்தியா வழங்குகின்றது

இலங்கைக்கு 400 மில்லியன் அமெரிக்க டொலர்; இந்தியா வழங்குகின்றது

இந்திய ரிசர்வ் வங்கி, 2020 நவம்பர் வரையிலும் இலங்கைக்கு 400 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை, நாணயப் பரிமாற்ற முறைமையின் அடிப்படையிலான வசதியளிப்பின் கீழ் வழங்கவுள்ளது. அதற்கான ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

கடன் திருப்பிச் செலுத்துதல்களை மறுசீரமைத்தல் தொடர்பிலான கலந்துரையாடல், நேற்று நடைபெற்றது. அதன்பின்னரே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இது, இலங்கையில் கொரோனாவுக்குப் பின்னரான பொருளாதாரத்தில் புத்துயிர் பெறுவதற்கு, இலங்கையுடன் இணைந்துச் செயற்படுவதற்காக, இந்தியாவால் முன்னெடுக்கப்படும் பாரிய அர்ப்பணிப்பின் மற்றுமோர் உறுதிப்பாட்டின் எடுத்துக்காட்டாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version