இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடற்பகுதியில் ஆங்காங்கே மணற்திட்டுக்கள் காணப்படுகின்றன. ஐதீகக்கதையான இராமாயணத்தில், வானர சேனைகள் அமைத்த பாலம் பற்றிய கூற்று உள்ளது. அந்த பாலத்தின் எச்சங்களென இந்த மணற்திட்டுக்களை கூறுவோரும் உள்ளனர்.
எனினும், அது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட விடயமல்ல. இந்திய பெரு நிலப் பரப்பிலிருந்து இயற்கை காரணங்களால் இலங்கை தீவு பிரிந்த போது உருவான எச்சங்களாக அவை கருதப்படுகின்றன.
எனினும், இந்திய அரசியலில் மதம் தீவிர பங்காற்றும் நிலைமையில், இலங்கைக்கான இந்திய தூதர்கள் இந்த மணற்திட்டுக்களுக்கு சென்று பூசை வழிபாடுகளில் ஈடுபடுவது வழக்கம்.