இரண்டு தடுப்பு மருந்துகளுக்கு சீனா அனுமதி வழங்கியது

கோவிட்-19 வைரசுக்கு எதிரான இரண்டு தடுப்பு மருந்துகளின் பரிசோதனை-களுக்கு சீனா அரசு அனுமதி வழங்கியுள்ளதாக அரச ஊடகமான சிங்குவா இன்று (14) தெரிவித்துள்ளது.

சினோவக் உயிர் தொழில்நுட்ப நிறுவனமும், வுகானைத் தளமாகக் கொண்ட வுகான் உயிர்தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளன.

கடந்த மார்ச் மாதமும் சீனா மேலும் ஒரு தடுப்பு மருந்தின் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியிருந்தது. இதனை கொங் கொங்கை தளமாகக் கொண்ட கன்சினோ உயிரியல் நிறுவனம் தயாரித்திருந்தது.