இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு

கவல் பரிமாற்றம் காலத்துக்கு காலம் மாற்றமடைந்து வந்துள்ளது. மனிதன் தோன்றிய காலத்திலேயே இந்த தகவல் தொடர்பும் தோற்றம் பெற்றுது. ஒலி, தீ, சைகை என்பனவே மனிதனின் ஆரம்பகட்ட தகவல் பரிமாற்ற நுட்பமாக காணப்பட்டது. இதனையடுத்து கல்வெட்டு, ஓலைச்சுவடி, செப்பேடுகள் போன்றவையோடு இயல், இசை வாயிலாகவும் கருத்துக்களை பிறருக்கு மனிதன் வெளிப்படுத்தினான்.

அதன் பின்பு தகவல் தொடர்பு அச்சடித்த காகிதங்கள், புத்தகங்கள் என்று வளர்ந்துது விஞ்ஞான வளர்ச்சிக்கு ஏற்ப தபால், தந்தி, தொலைபேசி என்று தகவல் தொடர்பு சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்த்தன. இதன் ஊடாக தகவல் தொடர்பு துறையில் ஒரு புதிய அத்தியாயம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆரம்ப காலகட்டத்தில் உலகம் என்பது பரந்துபட்ட ஒன்றாகக் காணப்பட்டது. ஆனால் இன்று தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் செல்வாக்கின் விளைவாக உலகம் இன்று ஓரு சிறு குடும்பம் போல சுருங்கி விட்டது. ஆரம்ப கால கட்டங்களில் நாட்டு நடப்புக்களை தெரிந்து கொள்வதற்கு செய்திகளையும், பத்திரிகைகளையும் எதிர்பார்த்து நின்றோம். ஆனால் இன்று அந்நிலை மாற்றம் பெற்று நடைபெறும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் அந்நொடிகளிலேயே அறிந்து கொள்ளத்தக்கதாக உள்ளது. காரணம் தகவல் தொழில்நுட்பத்தின் அபரீத வளர்ச்சி.

இவ்வாறான online  மயமாகக் காணப்படுவதனால் மாணவர்களின் கல்வியில் பாரிய பங்களிப்பு செய்கிறது. அதாவது உலகில் நடக்கும் அனைத்து விடயங்களும் உடனுக்குடன் Update செய்வதானது மாணவர்களின் நுண்ணிலை வளர்ச்சி அடையச் செய்வதுடன் அவர்களை நாளைய உலகின் பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கும் தயார்படுத்துகின்றது.

இந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் மாணவர்களது கல்வியில் மாத்திரமின்றி அனைத்து மனிதரது வாழ்க்கையிலும் பாரிய செல்வாக்கு செலுத்துவதாக உள்ளது. இன்றைய நிலையை பொறுத்தமட்டில் சிறு பிள்ளைகளின் கையையும் இதன் செல்வாக்கு விட்டு வைக்கவில்லை. இன்று பிள்ளைகள் இயற்கையில் விளையாடுவதை காட்டிலும் அதிகமாக தொலைபேசி மற்றும் ஏனைய video games விளையாடுவதே அதிகமாக காணப்படுகின்றுது.

அதாவது நன்மை எனும் போது sateillite image பெற்றுக் கொள்ளப்படுகின்றது. மேலும் CCTV தொழில்நுட்ப பயன்பாடு ஓரு நிறுவனத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்திக் கொள்ள முடிகின்றது. இன்னும் பல்வேறு நன்மைகள் காணப்படுகின்றன.

இவ்வாறான தொடர்பாடல் தொழிநுட்பம் இன்றைய உலகத்தின் மூலப்பொருள் என்பதில் தவறில்லை. இதன் விளைவாக எந்தளவு நன்மைகள் காணப்படுகின்றதோ அதே அளவான பிரதிகூலங்களும் காணப்படுகின்றன. அதாவது இத் தகவல் தொடர்பாடல் தொழிநுட்பத்தின் விளைவாகவே hackers வேலைப்பாடுகள் அதிகரித்துள்ளது. இது இன்றைய உலகின் மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலாக மாற்றமடைந்துள்ளது.

தொழில்நுட்பமானது வளங்களினதும், விழுமியங்களினதும் பாவனை தொடர்பான ஓர் வடிவமாகவே உள்ளது. இது அனைத்து மனித சமூகத்திலும் காணப்படுகின்றது. அதாவது ஆரம்ப கால சமூகத்தில் அவர்களது அறிவு, திறன் முதலானவற்றைப் பயன்படுத்துவதன் மூலமாகத் தொழில்நுட்ப ரீதியான சிந்தனைகள் உருவாக்கம் பெற்றன. இவை ஆரம்பகால சமூகம் முதற்கொண்டு தற்கால சமூகமான நவீன சமூகம் வரையும், பரந்தளவில் சேவையை நல்குவதாகக் காணப்படுகின்றது.

Capture 1 7 இன்றைய உலகில் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு

அந்தவகையில் தொழில்நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் ஏற்படுத்துகின்ற சாதகமான தாக்கங்கள் பற்றி நோக்குகின்ற போது தொழில் நுட்பங்கள் மனிதர்களினுடைய வேலைப்பழுவைக் குறைத்துவிட்ட நிலையை அவதானிக்க முடிகின்றது. உதாரணமாக விவசாயத் துறையை எடுத்துக் கொண்டால் பசுமைப்புரட்சியின் விளைவினால் இயந்திர வழு பயன்படுத்தப்பட்டு மக்களுக்குத் தேவையான உற்பத்தப் பொருட்கள் குறைந்த நேரத்தில் அதிகளவாகப் பெற்றுக்கொள்ள வழிவகுத்தது. இதனால் மனிதர்களினுடைய தேவைகள் உடனுக்குடன் நிறைவு செய்யக்கூடிய நிலைமையில் காணப்படுகின்றது. அத்துடன் நவீனத்துவத்தின் தோற்றத்தினால் பாரம்பரியத் தொழில்களிலிருந்து விடுபட்டு இலத்திரனியல் சார் தொழில்களில் மனிதர்கள் ஈடுபடுவதனால் உயர்ந்த ஊதியம் கிடைக்கின்றது. அதனால் அவர்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைகின்றது. அத்துடன் நேரவிரயங்கள் தொழில்நுட்ப விருத்தியினால் குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்கள் சமூகத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்த காரணமாகின்றன. ஆகவேதான் தொழில்நுட்பமானது மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதனை ஏற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது.

அதுமட்டுமல்லாமல் தொழில் நுட்பங்களினால் தகவல் தொடர்பு சாதனங்கள் அதிகரித்துள்ளன. உலகமயமாதல் செயன்முறை மூலமாக உலகம் சுருங்கிவிட்ட நிலைமை காணப்படுகின்றது. உடனுக் குடன் தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் இலகுவாக அமைகின்றது. அதுமட்டுமல்லாமல் மின்வணிகம் மூலமாக உடனுக்குடன் தேவையான பொருட்களைப் பெற்றுக்கொள்வதும், இலத்திரனியல் அட்டைகளைப் பயன்படுத்துவதும் அதிகரித்துக் காணப்படுகின்றது. இவை போன்ற செயற்பாடுகள் தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலமாகவே கிடைக்கப் பெற்றன. ஆகவே இவை மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றமையை எடுத்துரைக்கின்றன.

அடுத்து தொழில்நுட்பங்களினுடைய அதிகரித்த ஆக்கிரமிப்பின் காரணமாக மனிதர்களுடைய வேலை நேரங்கள் குறைக்கப்படுகின்றன. அதனால் மனிதர்கள் தனிமையில் காணப்படுவதுடன் தீயபழக்கவழக்கங்களுக்கு உட்படுவதற்கு துண்டுதலாக அமைகின்றன. அதாவது போதைவஸ்துக்களைப் பாவித்தல்இ சீட்டாட்டம்இ சூதாட்டங்களுக்கு அடிமையாதமல் முதலான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக அமைகின்றன. அதனால் குடும்ப சூழ்நிலைகள் பாதிக்கப்படுவதுடன் சமூக ரீதியாக அந்நியமாதலுக்கு உட்படவும் காரணமாக அமைகின்றது. இவ்வாறான தொழில் நுட்ப முன்னேற்றங்கள் மனிதர்களினுடைய அன்றாட வாழ்க்கையில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன என்பதைக் குறிப்பிட முடிகின்றது.

தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக மனிதர்களினுடைய வாழ்க்கை முறைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதவது ஆரம்ப காலங்களில் காணப்பட்ட கூட்டுக்குடும்ப மரபுகள் மாற்றமடைந்து தனிக்குடும்ப மரபுகள் வளர்ச்சியடைந்து வருகின்றமையானது மனிதர்களினுடைய குடும்பக்கட்டமைப்பில் ஏற்பட்டுவருகின்ற பாதகமான தாக்கமே ஆகும். அதாவது சுயம் சார்ந்த சிந்தனைப் பெருக்கங்கள் அதிகரித்து வருகின்றமையும் இதனாலேயாகும்.

எனவே தான் தற்கால உலகிற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி இன்றியமையாத ஒன்றாக காணப்படும். அதேவேளை அதன் பக்க வினைவுகளும் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆகவே நாம் தான் அதனை பயன்படுத்துவதில் அதிக அவதானம் எடுத்துக்கொண்டு எமது வாழ்க்கை தரத்தையும் உயர்த்துவோம்.

தெய்வேந்திரம் வஜிதா

மூன்றாம் வருடம் இரண்டாம் அரையாண்டு

சமூகவியல் துறை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்