Tamil News
Home உலகச் செய்திகள் இனி கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் – எந்த நாட்டில் இந்த நடைமுறை?

இனி கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் – எந்த நாட்டில் இந்த நடைமுறை?

ந்தோனேசியாவில் உள்ள பாலித் தீவில் கல்லூரிக் கட்டணமாகத் தேங்காய், கீரை கொடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. வருவாய் இல்லாமல் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள் எல்லாம் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டன.

ஒரு சில நாடுகளில் சில பகுதிகளில் மட்டும் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. எனினும் முழுக்க முழுக்கச் சுற்றுலாவை மட்டுமே நம்பியுள்ள பாலித் தீவில் கொரோனா பாதிப்பு மிகவும் எதிரொலித்தது. இது கல்வி நிறுவனங்களை மாற்றி யோசிக்க வைத்துள்ளது.

இந்தோனேசியாவின் அழகிய பாலி தீவில் வருவாய் இன்றி மக்கள் தவிப்பதால், விருந்தோம்பல் கல்லூரி ஒன்று மாணவர்களின் கல்விக் கட்டணத்தை மாற்று வழியில் செலுத்த அறிவித்துள்ளது.

அதன்படி, கல்விக் கட்டணமாகப் பணத்துக்குப் பதில் தேங்காய் கொடுக்கலாம். மாணவர்களிடம் இருந்து கட்டணமாகப் பெறப்படும் தேங்காய்கள் மூலம் எண்ணெய் தயாரிக்கக் கல்லூரி திட்டமிட்டுள்ளது .

இதுகுறித்து தி பாலி சன்’ பத்திரிகையில் வெளியிட்ட செய்தியில், ‘‘பாலியின் டெகலாலாங் பகுதியில் வீனஸ் ஒன் டூரிஸம் அகாடமி என்ற கல்லூரி செயல்படுகிறது. இங்கு படிக்கும் மாணவர்கள் கல்விக் கட்டணத்தைப் பணமாக இல்லாமல், தேங்காய்களாகக் கொடுக்கலாம் என்று அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் குடும்பத்தினருக்கு மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது’’ என்று பாராட்டி உள்ளது.

இதுகுறித்து அகாடமி இயக்குநர் வயான் பசெக் அதிபுத்ரா தி இந்து செய்தி நிறுவனத்திடம் ‘‘மாணவர்கள் அளிக்கும் தேங்காய்களில் தேங்காய் எண்ணெய் தயாரிப்போம். மேலும் முருங்கை இலை உட்பட மூலிகை இலைகளும் கட்டணமாகப் பெறப்படும் என்று அறிவித்துள்ளோம். இவற்றின் மூலம் மூலிகை சோப் உட்பட சில பொருட்களைத் தயாரித்து விற்போம். அதில் கிடைக்கும் பணத்தை வைத்துக் கல்லூரி நிர்வாகத்தை நடத்துவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

நன்றி – தி இந்து

Exit mobile version