Tamil News
Home செய்திகள் இனப்படுகொலையாளியின் விடுதலை மாவைக்கு தெரியாதாம்

இனப்படுகொலையாளியின் விடுதலை மாவைக்கு தெரியாதாம்

யாழ் மவாட்டம் மிருசுவில் பகுதியில் சிறுவர்கள் உட்பட 8 தமிழ் மக்களை படுகொலை செய்த குற்றச்சாட்டில் சிறீலங்கா உயர் நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட சிறீலங்கா இராணுவச் சிப்பாயை சிறீலங்கா அரச தலைவர் கோத்தபாயா ராஜபக்சா விடுதலை செய்தது தனக்கு தெரியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக தமிழ்மிரர் என்ற ஊடகம் கடந்த வெள்ளிக்கிழமை (27) தெரிவித்துள்ளது.

அனைத்துலக மன்னிப்புச்சபை, ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு என்பன இது தொடர்பில் உடனடியாக கண்டன அறிக்கைகள் வெளியிட்டதும், தற்போதைய கொரோனா வைரசின் பிரச்சனையை சிறீலங்கா அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதாக அவை குற்றம் சுமத்தியிருந்ததும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Exit mobile version