இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் – சிறிலங்கா சனாதிபதி 

இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் என்­ப­தனால் சகோ­த­ரத்­து­வத்­து­டனும் பரஸ்­பர புரிந்­து­ணர்­வு­டனும் நாட்டில் சமா­தா­னத்தைப் பாது­காப்­ப­தற்­காக அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென ஜனா­தி­பதி தெரி­வித்தார்.

நாட்டின் தற்­போ­தைய நிலைமை குறித்த புரிந்­து­ணர்­வு­டனும் புத்­தி­சா­து­ரி­யத்­து­டனும் செயற்­பட்டு பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காண வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்­ப­தோடு, நாட்டில் அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அர­சாங்கம் மேற்­கொள்ளும் என்றும் ஜனா­தி­பதி கோரிக்கை விடுத்தார்.

இஸ்­லா­மிய பக்­தர்­க­ளுக்­காக நேற்று மாலை ஜனா­தி­பதி மாளி­கையில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த தேசிய இப்தார் வைப­வத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றி­ய­போதே ஜனா­தி­பதி மைத்தி­ரி­பால சிறி­சேன மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.MS06042019 2 இனங்­க­ளுக்­கி­டையில் முரண்­பா­டு­களை ஏற்­ப­டுத்­திக்­கொள்­வ­தனால் நாடு அழிவை நோக்கி பய­ணிக்கும் - சிறிலங்கா சனாதிபதி 

இஸ்­லா­மிய மதத்தலை­வர்­களும் பெரு­ம­ள­வி­லான இஸ்­லா­மிய பக்­தர்­களும் இவ்­வை­ப­வத்தில் கலந்­து­கொண்­டனர். ஜனா­தி­பதி அங்கு தொடர்ந்து குறிப்­பி­டு­கையில்,

நாட்டு மக்கள் ஒரு­வ­ரை­யொ­ருவர் குரோ­தத்­து­டனும் சந்­தே­கத்­து­டனும் நோக்கும் நிலை காணப்­படும் வரையில் நாட்டில் ஐக்­கி­யத்­தினை கட்­டி­யெ­ழுப்ப முடி­யாது. அடிப்­ப­டை­வாத மற்றும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முற்­றாக நிரா­க­ரிப்­ப­தோடு, சகல இன மக்­களும் நியா­ய­மான சமூ­கத்தில் சுதந்­தி­ர­மாக வாழக்­கூ­டிய சூழலைக் கட்­டி­யெ­ழுப்ப அர­சாங்கம் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டும்.

முஸ்­லிம்கள் பெரு­ம­ளவில் கைது செய்­யப்­பட்டு தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. இவ்­வி­டயம் தொடர்­பான அறிக்கை ஒன்­றினை நான் பெற்­றுக்­கொண்­டுள்ளேன். கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி தாக்­கு­தலின் பின்னர் கைது செய்­யப்­பட்டு மேல­திக விசா­ர­ணை­க­ளுக்­காக 559 முஸ்­லிம்கள் மாத்­தி­ரமே தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­தோடு, உரிய விசா­ர­ணை­களின் பின்னர் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­க­ளுடன் தொடர்­பற்ற அனை­வ­ரையும் விரைவில் விடு­தலை செய்ய நட­வ­டிக்கை எடுப்போம் என்றார்.

இதே­வேளை நாட்டின் தற்­போ­தைய சூழ்­நி­லையில் அனைத்து இனங்­க­ளி­னதும் மதங்­க­ளி­னதும் கௌர­வத்­தினை பாது­காத்து அனை­வ­ருக்கும் நியா­யத்தைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்­காக ஜனா­தி­பதி மேற்கொண்டுவரும் முயற்சியினை பாராட்டிய இஸ்லாமிய மதத் தலைவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசி வழங்கினர்.

சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்