இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோட் சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை

இந்து ஆலயங்களில் திருவிழாக்களையும் மகோட்சவங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை வவுனியா மாவட்ட இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

இந்து ஆலயங்களின் ஒன்றியத்தின் நிர்வாகத்தினரால் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு வவுனியா ஆதிவிநாயகர் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது நாட்டில் பேசுபொருளாகவும் அச்சுறுத்தல் விடுக்கும் விடயமாகவும் கருதப்படும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வவுனியா அரசாங்க அதிபர் மற்றும் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய வவுனியாவில் இருக்கும் இந்து ஆலயங்களில் இடம்பெறும் நித்திய நைமித்திய பூஜை நிகழ்வுகளின் போது மக்கள் கூடுவதைத் தவிர்த்து ஆலயக் கடமைகளை நிறைவேற்றவேண்டுமென அனைத்து இந்து ஆலயங்களின் பரிபாலன சபையினருக்கும் பக்தர்களுக்கும் வேண்டுகோள் விடுக்கும் நோக்குடனேயே குறித்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இந்துக்களின் கடமையாக இருக்கும் நித்திய நைமித்திய பூஜைகளை சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் திருவிழாக்கள்இ மகோட்சவங்களை தற்காலிகமாக தவிர்க்குமாறும் தெரிவித்தனர்.
குறித்த தகவலை அனைத்து ஆலயங்களின் நிர்வாகத்தினரையும் தமது அலுயத்தின் ஒலிபெருக்கி மூலமாக பரிமாறுவதுடன் கொரனா பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வ அனைவருக்கும் பரிமாறும் இதன்போது தெரிவித்திருந்தனர்.