Tamil News
Home உலகச் செய்திகள் இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

இந்திய உளவு அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள்

இந்திய உளவு அமைப்பான றோ  அமைப்பிற்கு சுமந்தகுமார் கோயல் என்பவரையும் IB அமைப்பிற்கு அரவிந்த்குமார் என்பவரையும் தலைவராக அமைச்சரவையின் நியமனக்குழு, நியமித்துள்ளது.

தற்போது றோ அமைப்பின் தலைவராக உள்ள அனில்குமார் தஸ்தானா மற்றும்  IB அமைப்பின் இயக்குநராக உள்ள ராஜீவ் ஜெயின் ஆகியோரின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. அதாவது  ஜுன் 29 அன்று ஓய்வு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மத்திய அமைச்சரவையின் தலைவராக இருக்கும் மோடி, இந்திய உளவுத்துறையில் ஒன்றான றோ அமைப்பிற்கும், IB புலனாய்வு அமைப்பிற்கும் புதிய தலைவர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.

சமந்த் கோயல் 1984ஆம் ஆண்டு பஞ்சாப் பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். கடந்த பெப்ரவரி மாதம் பாகிஸ்தானில் நடந்த இந்திய விமானப்படை தாக்குதல் மற்றும் 2016ஆம் ஆண்டில் நடைபெற்ற சேஜிக்கல் ஸ்ரைக் ஆகியவற்றைத் திட்டமிட்ட குழுவில் முக்கிய பங்கு வகித்தவர்களில் சமந்த் கோயலும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் குமார் 1984ஆம் ஆண்டு அசாம், மேகாலயா பிரிவைச் சேர்ந்த IPS அதிகாரி ஆவார். பீகார் பிரிவு உளவுத்துறை தலைவராக இருந்தவர். நக்ஸல் விவகாரங்கள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கவனித்துள்ளார். பயங்கரவாதிகளை அடக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, இந்திய கடலோர காவல்படை இயக்குநராக தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் மும்பை மேற்கு பகுதி கடலோர காவல்படை கூடுதல் DGP யாக இருந்தவர்.

Exit mobile version