Tamil News
Home செய்திகள் இந்திய – சிறீலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

இந்திய – சிறீலங்கா கடற்படையினர் கூட்டுப் பயிற்சி

சிறீலங்கா மற்றும் இந்தியா கடற்படையினர் கூட்டாக பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதால் சிறீலங்கா கடற்படையினர் இரண்டு போர்க் கப்பல்கள் இந்தியாவுக்கு நேற்று முன்தினம் (05) புறப்பட்டுச் சென்றுள்ளதாக சிறீலங்கா கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இன்று (07) ஆரம்பமாகும் சிலிநெக்ஸ்-2019 என்ற இந்த கடற்படை ஒத்திகையானது எதிர்வரும் 12 ஆம் நாள்வரையிலும் இடம்பெறவுள்ளது.

இந்த நடவடிக்கையில் 323 சிறீலங்கா கடற்படையினரும் பெருமளவான இந்திய கடற்படையினரும் பங்குகொள்வதுடன், உலங்குவானூர்திகளும் பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அவை மேலும் தெரிவித்துள்ளன.

Exit mobile version