இந்தியாவில் ஒரே நாளில் 3,847 பேர் கொரோனாவுக்குப் பலி

இந்தியாவில் கொரோனா வைரஸால் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3,847 வைரஸ் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில்  கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 73 இலட்சத்து 69 ஆயிரத்து 93 ஆக பதிவாகியுள்ளது.

இந்நிலையில் இது வரையில்  உயிரிழப்பு எண்ணிக்கை 3 இலட்சத்து 15 ஆயிரத்து 235 ஆக பதிவாகியுள்ளது.