இந்தியாவின் கொரோனா தடுப்பூசிக்கு இலங்கை அனுமதி

இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கையில் இந்தியா ஈடுபட்டுள்ளது என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கொவிசீல்ட் மருந்தினை பயன்படுத்துவதற்கு தனக்கு அவசர அனுமதி வழங்கப்பட்டுள்ளதை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது என இந்திய தூதரக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு கூடியவிரைவில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்குவதற்கான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.