இணைய வழி ஊடாக யாழ்.நுாலக எரிப்பு நாள் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நினைவேந்தல்

யாழ்ப்பாண நூலக எரிப்பின் 40வது ஆண்டு நினைவு தினம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இணைய வழியின் ஊடாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

சிங்களப் பேரினவாதத்தினால் 1981 ஜூன் முதலாம் திகதி யாழ்ப்பாணப் பொது நூலகம் ஜேஆர் ஜெயவர்த்தனவின் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சி காலத்தில்  திட்டமிட்டு எரிக்கப்பட்டுள்ளது.

இத்தகையதான தமிழர்கள் மீதான பண்பாட்டு இனவழிப்பினை நினைவு கூறும் முகமாக இன்றைய தினத்திலே கொரோனா பெரும் தொற்றுநோய் நிலைமையினை கருத்தில் கொண்டு இணைய வழியின் ஊடாக யாழ் பொது நூலக எரிப்பு நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் சட்டத்தரணி நாமல் அஜித் ராஜபக்ச எரியும் நினைவுகள் ஆவணப்பட இயக்குனர் சோமிதரன் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் தேசிய உணர்வாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.