Tamil News
Home செய்திகள் ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை எனத் தகவல்

ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற 7 மீனவர்கள் கரை திரும்பவில்லை எனத் தகவல்

ஆழ்கடல் தொழிலுக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்த 07மீனவர்களைக் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

சாகர குமார – 4 என்ற படகில், கடந்த 26 ஆம் திகதி கடற்தொழிலுக்கு குறித்த மீனவர்கள் சென்றிருந்த நிலையில், தற்போதுவரையில் அவர்கள்  குறித்து  எவ்வித தகவலும் கிடைக்கப்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த 7 மீனவர்களும், மாரவில மற்றும் பருதெல்பொல முதலான பகுதிகளை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களாவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version