ஆளில்லா விமானத்திற்கு தடை நீக்கம்

கடந்த ஆண்டு, இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய தற்கொலைப் படைத் தாக்குதலில், 263பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து “ட்ரோன்“ எனப்படும் ஆளில்லா விமானங்களை இயக்கத் தடை விதிக்கப்பட்டது. தற்போது, ஊடகங்கள், விளம்பர நிறுவனங்கள், திருமண புகைப்பட வல்லுநர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கையை ஏற்று, ஆளில்லா விமானங்களின் பயன்பாட்டிற்கான தடையை இலங்கை அரசு நீக்கியுள்ளது.