Home செய்திகள் மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்­டகை கடந்து வந்த பாதை – சில தகவல்கள்!

மறைந்த ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்­டகை கடந்து வந்த பாதை – சில தகவல்கள்!

மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஓய்­வு­நிலை ஆயர் இரா­யப்பு யோசேப்பு ஆண்­டகை, ஆயர் பணியில் 25 வரு­டங்­களை நிறை­வு­செய்து வெள்­ளி­விழாக் காண்­கிறார். இவர் மன்னார் மறை­மா­வட்­டத்தின் இரண்­டா­வது ஆய­ராக 1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி திரு­நி­லைப்­ப­டுத்­தப்­பட்டார்.

ஆயர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்­பாணம் நெடுந்­தீவில் பிறந்தார். நெடுந்­தீவு றோ.க. பாட­சாலை, முருங்கன் மகா வித்­தி­யா­லயம், யாழ். புனித பத்­தி­ரி­சியார் கல்­லூரி ஆகி­ய­வற்றில் தனது பாட­சாலைக் கல்­வியைத் தொடர்ந்தார்.

கண்டி தேசிய குரு­மடம், திருச்சி புனித பவுல் குரு­மடம் ஆகி­ய­வற்றில் குருத்­துவக் கல்­வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமி­லி­யா­னுஸ்­பிள்ளை ஆண்­ட­கை­யினால் யாழ். மரி­யன்னை பேரா­ல­யத்தில் குரு­வாகத் திரு­நி­லைப்­ ப­டுத்­தப்­பட்டார்.

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்­ப­ரசர் இரண்டாம் அரு­ளப்பர் சின்­னப்­பரால் மன்னார் மறை­மா­வட்­டத்தின் ஆய­ராக நிய­மனம் பெற்றார்.

1992ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்­வு­நிலை ஆயர் தோமஸ் சௌந்­த­ர­நா­யகம் ஆண்­டகை உட்­பட இலங்­கையின் ஏனைய ஆயர்கள் புடை­சூழ மரு­த­மடு அன்னை ஆல­யத்தில் ஆய­ராகத் திருப்­பொ­ழிவு செய்­யப்­பட்டார்.

ஆயர் இரா­யப்பு யோசப்பு ஆண்­டகை, தன்­னிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்ட மறை­மா­வட்டம் மட்­டி­லான தனது கட­மை­களை செவ்­வனே நிறை­வேற்றி வந்தார். திருப்­பலி, திரு­வி­ழாக்கள், பங்­குத்­த­ரி­சிப்­புக்கள், ஆலோ­ச­னைகள், கூட்­டங்கள், மாநா­டுகள், ஆலய மற்றும் பங்­கு­மனைக் கட்­டு­மா­னங்கள், ஏழை­க­ளுக்­கான உத­விகள் என அவர் தன் கட­மை­களை மேற்­கொண்டு வந்தார்.
பம்­பை­ம­டுவில் அன்னை திரே­சாவின் அருட்­ச­கோ­த­ரி­களை வர­வ­ழைத்து முதியோர் மற்றும் கைவி­டப்­பட்­ட­வர்­களைப் பரா­ம­ரிக்க ஒரு இல்­லத்தை ஆரம்­பித்தார்.

முருங்­கனில் டொன் பொஸ்கோ குருக்­களை வர­வ­ழைத்து இளைஞர், யுவ­தி­க­ளுக்­கான தொழிற்­ப­யிற்­சி­களை வழங்க ஆவன செய்தார். அடம்­பனில் இயேசு சபைக் குருக்­களை வர­வ­ழைத்து அவர்­களின் பணி மறை­மா­வட்­டத்­திற்கு கிடைக்க வழி­செய்தார்.


துன்­புற்ற மக்­களின் துயர் துடைத்தார்

ஒரு கொடூ­ர­மான போர்ச் சூழலில் பல்­வேறு நிலை­களில் துன்­பங்­களைச் சுமந்­து­நின்ற மக்­களின் துய­ரங்­களைத் துடைக்க அவர் அரும்­பா­டு­பட்டார்.

சிறை­களில் வாடும் கைதி­களை அவர் அடிக்­கடி சென்று பார்­வை­யிட்டு அவர்­களின் விடு­த­லைக்­காகக் குரல் கொடுத்தார். அவர்­க­ளோடு தனிப்­பட்ட தொடர்­பா­டல்­களை வைத்­தி­ருந்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள் சார்­பாக நின்று அவர்­களைக் கண்­டு­பி­டிக்க அல்­லது அவர்­களின் கதியை வெளிக்­கொ­ணர ஓயாது உழைத்தார்.

யுத்­தத்தால் தமது இல்­லி­டங்­களை இழந்­த­வர்­க­ளுக்கு வீடு­களைக் கட்­டிக்­கொ­டுக்க முயற்­சி­களை மேற்­கொண்டார். முள்­ளிக்­கு­ளத்தில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும், விடத்­தல்­தீவில் இருந்து இடம்­பெ­யர்ந்த மக்­க­ளுக்கும் அவர் காணி­களை, வீடு­களை வழங்­கி­யமை இதற்கு உதா­ர­ண­மாகும்.

யுத்­தத்தால் அங்­க­வீ­னர்­க­ளாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு வாழ்­வோ­தய நிறு­வ­னத்தின் உத­விக்­கரம் பிரிவு மூலம் உத­வி­களைப் புரிந்தார். வவு­னியா பம்­பை­ம­டுவில் அமைந்­  துள்ள வரோட் நிறு­வ­னத்தின் ஊடா­கவும் இவர்­களின் புனர்­வாழ்­வுக்­காகப் பாடு­பட்டார்.

யுத்­தத்­தாலும், சுனா­மி­யி­னாலும் பெற்­றோரை இழந்து ஆத­ர­வற்று நின்ற பெண் சிறார்­க­ளுக்கு வவு­னி­யாவில் சலே­சிய அருட்­ச­கோ­த­ரி­களின் பரா­ம­ரிப்பில் இல்­லத்தை ஆரம்­பித்தார். அதேபோல் மன்­னா­ரிலும் ஆண் சிறார்­க­ளுக்­கான ஓர் இல்­லத்தை ஆரம்­பித்தார். இவ்­வாறு இன்னும் பல துயர்­து­டைப்புப் பணி­களை முன்­னெ­டுத்தார்.

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசா­லையில் கடற்­ப­டை­யி­ன­ருக்கு எதி­ராக இடம்­பெற்ற தாக்­கு­த­லின்­போது இரண்­டா­யி­ரத்­திற்கும் அதி­க­மான மக்கள் பேசாலை புனித வெற்­றி­நா­யகி அன்னை ஆல­யத்தில் அடைக்­கலம் புகுந்­தி­ருந்­தனர்.

ஆல­யத்தை நோக்கி துப்­பாக்கி வேட்­டுக்­களைத் தீர்த்­துக்­கொண்டு கடற்­ப­டை­யினர் செல்­கின்ற செய்­தியை அறிந்த ஆயர் ஆபத்­தான அந்தச் சூழ்­நி­லையில் அன்­றைய மன்னார் பிர­தேச செய­லாளர் திரு­மதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசா­லைக்கு சென்று நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டிற்குள் கொண்­டு­வந்தார். இச்­சம்­பவம் தொடர்பில் வத்­திக்­கா­னுக்கு தக­வல்­களை அனுப்­பினார்.

2007ஆம் ஆண்டு ஜன­வரி 2ஆம் திகதி இலுப்­பைக்­க­டவை பட­கு­த்துறைப் பகு­தியில் விமானக் குண்­டுத்­தாக்­கு­தலில் இரண்டு குழந்­தைகள் உட்­பட 13 அப்­பாவிப் பொது­மக்கள் கொல்­லப்­பட்­ட­போது அந்தத் தாக்­குதல் நடந்த சில மணித்­தி­யா­லங்­களில் குரு­மு­தல்வர் விக்ரர் சோசை அடி­க­ளா­ருடன் அந்த இடத்­திற்கு சென்று அம் மக்­களின் துய­ரத்தில் பங்­கு­கொண்­ட­தோடு கொல்­லப்­பட்­ட­வர்கள் கடற்­பு­லிகள் என்ற அரசின் செய்­தியை மறுத்து பொது­மக்­கள்தான் கொல்­லப்­பட்­டனர் என்ற செய்­தியை உல­கத்­திற்குத் தெரி­யப்­ப­டுத்­தினார்.

மன்­னாரில் 2011 ஜன­வ­ரியில் இடம்­பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்­க­ளோடு இணைந்து மக்­களின் பிரச்­சி­னை­களை எழுத்து மூல­மாக அறிக்­கை­யாக முன்­வைத்தார். காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்கள், தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள புலிகள் இயக்க சந்­தேக நபர்கள், சட்­டத்­திற்குப் புறம்­பான கொலைகள், போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் புனர்­வாழ்வு போன்ற உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய பல விட­யங்கள் மற்றும் அர­சியல் தீர்வின் அவ­சியம் போன்ற விட­யங்­களை அவர் இந்த அறிக்­கையில் குறிப்­பிட்­டி­ருந்தார். வன்­னியில் இருந்த மக்­களில் 146,679 பேருக்கு என்ன நடந்­தது? என்ற கேள்­வியை கேட்டு அர­சாங்­கத்தை ஆட்­டம்­காணம் செய்தார்.

ஈழத்தமிழர் போராட்ட வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக வாழும் போதும், உயிர்நீத்த பின்னரும் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை இருப்பார் என்பது பொதுவான கருத்தாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்­ட­னங்­க­ளுக்கு ஆயரின் விளக்கம்

பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!
2012ஆம் ஆண்டு லக்­பிம என்ற சிங்­களப் பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய நேர்­கா­ணலில் தன்­னைப்­பற்­றிய பல விமர்­ச­னங்­க­ளுக்கு அவர் பதில் அளித்­தி­ருந்தார். நீங்கள் சர்ச்­சைக்­கு­ரிய ஆயர்­ என அழைக்­கப்­ப­டு­கின்­றீர்கள். இது­பற்­றிய உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்­விக்கு அவ­ரு­டைய பதில், நான் சர்ச்­சைக்­கு­ரிய ஆயர் என அழைக்­கப்­ப­டு­கின்றேன். ஏனென்றால் சர்ச்­சைக்­கு­ரிய விட­யங்கள் நடை­பெ­று­கின்­றன. நான் அந்த விட­யங்­கள்­ பற்றிப் பேசும்­ போது சர்ச்­சைக்­கு­ரிய ஆளாக மாறு­கின்றேன்.

நான் உண்­மையைப் பேசு­வதால் வெளிப்­ப­டை­யாகப் பேசும் ஆயர் என்­கின்­றனர். நான் ஏழை­கள் மேல் கரி­சனை கொண்டு நீதிக்­காகக் குரல் கொடுத்தால் நான் இலங்­கைக்கு எதி­ரா­னவன், புலிகள் அல்­லது பிரி­வி­னை­வாதி என்­கின்­றனர். இப்­பெ­யர்­க­ளைப்­பற்றி நான் அலட்­டிக்­கொள்­வது இல்லை. நான் தொடர்ந்தும் அநீ­திக்கு எதி­ராகக் குரல் எழுப்­புவேன். மனித உரிமை மீறல்­க­ளுக்கு எதி­ராகப் போரா­டுவேன்.

நீங்கள் விடு­தலைப் புலி­யா? அல்­லது அந்த அமைப்பின் தீவிர ஆத­ர­வா­ளரா? என்ற கேள்­விக்கு அவர் அளித்த பதில், நான் ஏன் அவ்­வாறு அழைக்­கப்­ப­டு­கிறேன் என்­பது எனக்குத் தெரி­யாது. என்னை அப்­படி அழைப்­பது அவர்­களின் பல­வீனம்.

நான் விடு­தலைப் புலி­களின் சில செயற்பாடுகளையும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. நான் அவற்றை கண்­டித்­தி­ருக்­கிறேன்.

ஒரு குரு என்ற வகையில், உண்­மையையும், வாழ்­வையும், வழி­யையும் வெளிப்படுத்தி வன்­மு­றைக்குப் பலி­யான இயேசுவை பின்­பற்­று­கி­றவன் என்ற வகையில் நான் எனது கட­மை­களைச் செய்கின்றேன் என்றார்.

பணி ஓய்வு

1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவர் சுகவீனமடையும்வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கிவந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக பாப்பரசர் பிரான்சிஸிஸ் அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார்.

2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கம் “இனமான ஏந்தல்” என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

குறிப்பாக ஈழத்துத் திருச்சபையின் பணியாளர்கள் ஆயரின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற விளைய வேண்டும்.

காலத்தின் தேவைக்கு ஏற்ப துணிவோடு, உறுதியோடு செயலாற்ற வேண்டும். ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் வாழ்வும் பணிகளும் இன்றைய, நாளைய தலத்திருச்சபைக்கு சவாலாக, விழிப்புணவர்வாக, உந்துதலாக அமைய வேண்டும்.

புகைப்படங்கள் – முக நுாலில் இருந்து…

Exit mobile version