முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் கிராம மக்களின் காணிகளுக்கு செல்ல வன ஜீவராசிகள் திணைக்களம் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர்.
கிராமத்தில் குடியேறி வாழ்ந்த ஒருவரை கைது செய்துள்ளதோடு குடும்ப பெண்ணொருவரையும் வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி தாக்க முற்பட்டுள்ளார் என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.
1984 வரை எல்லை கிராமமாக பல குடும்பங்கள் வாழ்த்த சொந்த ஊருக்கு செல்லமுடியாத நிலையை ஆண்டான்குளம் கிராம மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.