Tamil News
Home செய்திகள் ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை ஆற்ற ஒருங்கிணைய வேண்டும் – சமூக உரிமைகளுக்கான அமைப்பு

ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை ஆற்ற ஒருங்கிணைய வேண்டும் – சமூக உரிமைகளுக்கான அமைப்பு

தமிழர் தாயகம் எங்கும் அதிகரித்துள்ள அதி தீவிர பௌத்த பெருந்தேசிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை  ஆற்ற சிவில் சமூகங்கள்அரசியல் தரப்புக்கள்புத்தி ஜீவிகள் மற்றும் பொதுமக்கள் திரட்சியாக ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை  ஆற்ற ஒருங்கிணைய வேண்டும் என திருகோணமலையை தளமாகக் கொண்ட புழுதி என்ற சமூக உரிமைகளுக்கான அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த புதன்கிழமை (30) வெளியிட்டஅதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

திருகோணமலையில் மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மண்டபத்திற்குள் சில பௌத்த பிக்குக்கள் உள்நுழைந்து விகாரை கட்டுவதற்கான அனுமதி வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர்மட்டக்களப்பில் மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் நில நிலைமைகளை ஆராயச் சென்ற சர்வமத தலைவர்களையும் சிவில் சமூக அமைப்பினரையும் பௌத்த பிக்கு தலைமையிலான குழு சிறை பிடித்து தடுத்து வைத்திருந்தனர்.

கடந்த சில நாட்களில் கிழக்கில் நடைபெற்ற  இரு வேறு நிகழ்வுகளை நாம் செய்தியாக கடந்து செல்ல மெல்ல மெல்ல பழக்கப்படுத்த படுகிறோம்தொடர்ச்சியாக தொல்லியல் அடையாளமுள்ள இடங்களாக இனங்காணப்பட்ட தமிழர் வழிபாட்டிடங்கள் மற்றும் வாழ்விடங்கள் மீதான பௌத்த ஆக்கிரமிப்பு நம்மை திட்டமிட்டு விரக்தி மனநிலைக்குள் தள்ளி ஆக்கிரமிப்பை எதிர்க்க முடியாத மனநிலைக்கு இட்டுச் செல்கிறது.

பௌத்த மதகுருக்கள் உள்நுளைந்ததும் அத்தனை பேரும் எழுந்து மரியாதை செய்கின்றனர்இந்த நிலைமை ஆக்கிரமிப்பின் வீரியத்தை வெளியே சொல்ல போதுமானதாகும்.

பண்பாட்டு இடங்கள்பொருளாதார கட்டுமானங்கள்வாழ்விடங்கள் என சிங்களம் தனது ஆக்கிரமிப்பை வலுவான மத பின்னணியில் முறைசார் அளவீடுகளின் அடிப்படையில் செயற்படுத்தி வருகிறதுதமிழ்த்தேசிய அரசியல் இந்த ஆக்கிரமிப்புகளிற்கான மறுதலிப்பு நிகழ்ச்சிகளினுள்ளே திட்டமிடப்பட்டு மூழ்கடிக்கப்பட்டிருக்கிறதுஇனமாக திரட்சி கொள்ளும் வகையிலான தயார்படுத்தலை தமிழர் தரப்பு கைக்கொண்டு விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சிங்களம் விரித்த வலைக்குள் நாம் சிக்கியிருக்கிறோம்.

ஆக்கிரமிப்பு ஊடாக இன முறுகல் ஒன்றை ஏற்படுத்தி வாக்கு வங்கிகளை சரிசெய்து கொள்ள சிங்கள பெருந்தேசிய கட்சிகள் கங்கணம் கட்டி நிற்கின்றன.

இவ்வகையான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதற்கு அரசும் அதன் காவல்துறையும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்இன முரண்களை கூர்மைப்படுத்தும் செயற்பாடுகளை இல்லாமல் செய்ய உடனடி நடவடிக்கைகள் தேவை.

தமிழ்த்தேசிய தரப்பு தனது இலக்கை அடைவதற்கான வழிவகைகளை முறையாக கண்டு பிடித்து அதன்படி பயணப்பட வேண்டிய நேரம் இதுவாகும்ஆக்கிரமிப்புக்களுக்கு பதிலிறுக்கும் சம காலத்தில் நமக்கான எதிர்கால வேலைத்திட்டங்களிலும் கவனக் குவிப்பை செய்வதாக வேண்டும்.

மயிலத்தமடு பிரச்சினை தொடர்பாக தமிழர் தரப்பு போதிய எதிர்வினைகளை ஆற்றாமல் இருப்பது இதே போன்ற ஆக்கிரமிப்புக்களை தொடர்ந்தும் செய்ய பேரினவாதத்திற்கு மேலும் வாய்ப்பாகிவிடும்ஆக்கிரமிப்பை எதிர்க்கும் தமிழரின் தேர்தல் அரசியல் தரப்புக்கள் அதனை மக்கள் மயப்படுத்தாமல் சிறிய எண்ணிக்கையில் ஆட்களாக சேர்ந்து மிகப்பலவீனமான கவனயீர்ப்பையே செய்கின்றனர்.

சிவில் சமூகங்கள்அரசியல் தரப்புக்கள்புத்தி ஜீவிகள் மற்றும் பொதுமக்கள் திரட்சியாக ஆக்கிரமிப்பிற்கு எதிர்வினை  ஆற்ற ஒருங்கிணைய வேண்டும்பௌத்த பேரினவாத நிகழ்ச்சிகள் தமிழர் தாயக பிரதேசங்களை சிதைக்கும் வேலைத்திட்டங்களை அவர்கள் நிறுத்தும் வரை நமது எதிர்வினைகள் பலமிக்கதாக ஒருங்கிணைக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.

நமது இன்றைய மௌனம் எதிர்கால சந்ததிக்கு செய்யும் பாரிய துரோகம் என்பதனை மனதிற்கொள்வோம்அரசியல் வேறுபாடுகளை தவிர்த்து இணைந்து பயணிப்போம்.

 

Exit mobile version