அவுஸ்திரேலிய தடுப்பு முகாமில் அகதிகள் போராட்டம்

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் குடிவரவுத் தடுப்பு முகாமில் சிறை வைக்கப்பட்டுள்ள 14 அகதிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் உள்ள அகதிகள் சிலர் சுமார் 8 ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட 2 அகதிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

 “இந்த அரசாங்கம் ஒன்பது ஆண்டுகளாக சித்திரவதை செய்வது ஏன்? எங்களுக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு விடுவிக்கப்பட்ட அகதிகளுக்கும் என்ன வித்தியாசம்? எங்களால் இனியும் தடுப்பு முகாமில் இருக்க முடியாது,” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  அகதி ஒருவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் “தடுப்பில் உள்ள ஒவ்வொரு நாளும்  அகதிகளின் மனநிலையை மேலும் மோசமாக்குகிறது. அவர்களுக்கு விடுதலை வேண்டும்,” என Refugee Action Collective அமைப்பின் பேச்சாளர் ஐன் ரிண்டோல் குறிப்பிட்டிருக்கிறார்.