அவுஸ்திரேலிய கனவை கைவிடுவதை தவிர வேறு வழியில்லை: இந்திய மாணவர்

அவுஸ்திரேலியாவில் விருந்தோம்பல் மேலாண்மை கல்வியைக் கற்றுவரும் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்ப்ரீத் சிங், அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாத நிலையில் அவுஸ்திரேலிய கனவை கைவிடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை எனக் கூறியிருக்கிறார்.
கல்விக் கட்டணமாகவும் அவுஸ்திரேலியாவில் உள்ள தனது அறைக்கு வாடகையாகவும் பெரும் தொகையை செலுத்திவிட்ட சூழலில் தனது பொருளாதார வளம் முழுதும் தீர்ந்துவிட்டதாக வருத்தம் கொண்டிருக்கிறார் 26 வயதான குர்ப்ரீத் சிங்.
இவரைப் போல சுமார் 9 ஆயிரம் இந்திய மாணவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு திரும்ப முடியாத நிலையில், இணையம் வழியாக (via online classes) தங்களது கல்வியை முடிக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.